search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி"

    • 1200 வீரர்,30 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்
    • வருகிற ஜனவரி 7-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    இந்திய பளு தூக்கும் சங்கம் நடத்தும் தேசிய சாம்பியன்ஷிப் பளு தூக்கும் போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறி யியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. வருகிற ஜனவரி 7-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

    யூத், ஜூனியர், சீனியர் ஆகிய 3 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக உடல் எடை அடிப்படையில் 30 பிரிவுகளாக போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டி யில் அனைத்து மாநிலங்க ளையும் சேர்ந்த 1200 வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அகில இந்திய பளு தூக்கும் சங்க தலைவர் சகாதேவ் யாதவ், அகில இந்திய துணை தலைவரும், தமிழ்நாடு பளு தூக்கும் சங்க தலைவருமான பொன் ராபர்ட்சிங், அகில இந்திய பொது செயலாளர் ஆனந்த கவுடா மற்றும் மாநில் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறு வார்கள். எனவே முன்னணி வீரர்கள், சாதனையாளர்கள், சர்வதேச வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள் கின்றனர்.

    • தேசிய இணைய பாதுகாப்பு மையத்தை கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்.
    • காவல் துறையில் தொழில் நுட்பத்தின் தேவை மற்றும் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

    நாகர்கோவில் :


    நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தேசிய இணைய பயன்பாட்டு பாதுகாப்பு மையத்தை கல்லூரி தலைவர் பொன் ராபர்ட் சிங் வழி காட்டுதலின் படி கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். காவல் துறையில் தொழில் நுட்பத்தின் தேவை மற்றும் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.


    இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக புதுடில்லியைச் சேர்ந்த தேசிய இணைய பாதுகாப்பு தர நிர்ணய இயக்குனர் முனை வர் காளிராஜ் நாயுடு மற்றும் கேரள மாநில தேசிய இணைய பாதுகாப்பு ஆய்வு மையத் தலைவர் சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இன்றைய இளைஞர்களின் வாழ்வில் இணையத்தின் பயன்பாடுகளும் அதில் உள்ள பாதிப்புகளையும், ஆபத்துகளையும் மாணவர்களும், பெற்றோர்க ளும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தனர்.

    கல்லூரி முதல்வர் முனைவர் நடராஜன் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் பேராசிரியர் அருள்சன் டேனியல் முதன்மையுரை வழங்க, கணினி துறை பேராசிரியர் ஐசக் சாஜன் நன்றி கூறினார்.

    ×